Monday, December 28, 2009

ஒரே வீடு

யாதும் ஊரே
யாவரும் கேளீர் - இதை
வெள்ளைக்காரி சொல்லவில்லையே

அவுட்சோர்சிங்கில் சகாக்கள்
இந்தியனுக்கு தாரைவார்த்தனர்
இவள் மட்டும்
தபித்தாள்

ட்ரைனிங்கில் பத்திரக்காளி
துரைகளுக்கு செல்லும்
ரிபோர்ட்டில் நக்கீரர்

இந்தியா .........
புத்தன்,
இராமானுஜன் ,
தெரேசா
புழுங்கிய வீடல்லவா
இந்தியன் இந்தியனாய் நடந்தான்

கடைசி நாள் ..........
பட்டுப்புடவை, மூக்குத்தியில்
ஜொலித்தாலும்
கண்களால் இந்தியர்களுடன் குழந்தையானாள்

யாவரும் ஒன்றே
யாவும் ஒன்றே

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

3 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete